Date:

ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்க கூறி நுவரெலியாவில் போராட்டம்

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (09) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம்’ எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

 

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களின் நன்மை கருதியும், நிர்வாகச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கிலும் புதிதாக 5 பிரதேச செயலகங்களை அந்த மாவட்டத்தில் அமைப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அப்போது துறைசார் அமைச்சராக இருந்த வஜீர அபேவர்தனவால் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. பிரதேச செயலகங்களுக்குப் பதிலாக உப செயலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உடனடியாக புதிய பிரதேச செயலகங்களை அமைக்குமாறு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மகஜரொன்றும் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...