Date:

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களது நியமன விடயம் பிற்போடப்பட்டுள்ளது- நிதி அமைச்சு

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களது நியமன விடயம் குறித்து பின்பு அவதானம் செலுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கடிதம் மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சிக்கல் இல்லை என்ற போதும், நிதியமைச்சின் இந்த அறிவுறுத்தலாலேயே இது தாமதிக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி இராஜரட்ண குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை, நிதியமைச்சின் சுற்று நிருபத்தை மீறி மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்க முடியாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சினால் தமக்கு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில், ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...