தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கமும், இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனமும், தொழிலாளர்களுடன் இணைந்து இன்று ஹட்டனில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டனில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்ததிருந்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தொழில் ஆணையாளரிடம் கையளித்தமை குறிப்பிடதக்கது.அதே வேளை தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் வேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.