சுன்னாகம் – மயிலினி காட்டுப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.