புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள திருமதி இலங்கை அழகி பட்டத்தை உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கை திருமதி அழகியை தெரிவுசெய்வதற்காக தமது அமைப்பு கொண்டுள்ள சட்டரீதியான அதிகாரத்துக்கமைய, இன்று முதல் புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டத்தை, உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் எந்தவிதத்திலும் பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவித்தார்.
புஷ்பிகா டி சில்வா கடந்த 2021 ஏப்ரல் 4 ஆம் திகதி திருமதி இலங்கை அழகியாக மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.