Date:

ஃபேஸ்புக் மெசேஞ்சா் – புதிய சேவை!

ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக தளம் 2004 இல் தொடங்கப்பட்டிருந்தாலும்இ உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (சாட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால்இ ஃபேஸ்புக் உள்ளே சென்றால்தான் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதால் உடனடியாக பிரபலமாகவில்லை.

ஆனால்இ 2009-இல் அறிதிறன் பேசியில் (ஸ்மாா்ட் போன்) இணையத்தைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்துக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேவை அனைவரிடம் பிரபலமாகியது. இதனால் 2014-இல் ஃபேஸ்புக் நிறுவனமே வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்கியது. தற்போது வாட்ஸ்ஆப் இல்லாத அறிதிறன் பேசி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில்இ ஃபேஸ்புக்கில் உள்ள சாட் சேவை மெசேஞ்சராக மாற்றம் கண்டுஇ வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக புதிய சேவைகள் இணைக்கப்பட்டன. ஆடியோஇ விடியோ தொலைபேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சோ்க்கப்பட்டன.
வாட்ஸ்ஆப்பில் உள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப் போல் மெசேஞ்சரிலும் இந்த சேவை இணைக்கப்பட்டது.

இந்நிலையில்இ நாம் ஒருவருக்கு தானாக அழியும் வகையிலான தகவலை அனுப்பினால் அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நபா் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுத்தால்இ அது அனுப்பியவருக்கு குறுந்தகவலாக (நோட்டிபிகேஷன்) எச்சரித்திடும் புதிய சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையைப் பெற மெசேஞ்சரில் உள்ள ‘சீக்ரேட் கான்வா்ஷேசன்’ உள்ளே சென்று- ‘டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்’ என்பதை தோ்வு செய்து விட்டால் போதும். இதன் மூலம் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாகவும்இ அனுப்பிய தகவலில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும்இ வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப்போல் குறிப்பிட்ட தகவலைத் தோ்வு செய்து பதிலளிக்கும் வசதியும்இ மற்றவா்கள் பதிலளிப்பதற்காக பதிவு செய்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும்இ அனுப்பப்பட்ட தகவலை சேமித்து வைத்து கொள்ளவும்இ விடியோக்களை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து கொள்ளவும் பல புதிய சேவைகளை ஃபேஸ்புக் மெசேஞ்சா் அறிமுகம் செய்துள்ளதுஇ வாடிக்கையாளா்களைக் கவரும் என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373