Date:

திருமலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை – மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க (21 வயது) என தெரியவருகின்றது.

மஹதிவுல்வெவ – கிபுல்பொக்க குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி சடலத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இருந்த போதிலும் குறித்த இளைஞரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் வழமை போன்று குளத்திற்கு குளிக்க சென்று வீடு திரும்பவில்லை என குளத்துக்கு சென்று தேடிய போது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

சடலத்தை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய...

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...