பல்வேறு வகையான ஊழல்கள் மற்றும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்தல் அல்லது தாக்குதல் காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊழல் மற்றும் சித்திரவதை மற்றும் கைதிகள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மேலும், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்டவிரோதச் செயல்கள் குறித்து அறிவிப்பதற்காக 0112 678 600 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.