Date:

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் புத்தளம் மேல் நீதிமன்றுக்கு பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது அந்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.

அவருக்கு பிணை வழங்குவதற்கு  இந்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து நீதிபதி குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில்  விடுவிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது பிணை கோரிக்கையை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சட்டமா அதிபர் அண்மையில் மன்றுக்குத் தெரியப்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு இன்று பிணை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமைக்காக அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 18 மாதங்களாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...