Date:

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் புத்தளம் மேல் நீதிமன்றுக்கு பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது அந்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.

அவருக்கு பிணை வழங்குவதற்கு  இந்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து நீதிபதி குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில்  விடுவிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது பிணை கோரிக்கையை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சட்டமா அதிபர் அண்மையில் மன்றுக்குத் தெரியப்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு இன்று பிணை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமைக்காக அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 18 மாதங்களாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...