அனர்த்தங்களால் மின்சார விநியோகத்தடை

அதிக மழை காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவான அனர்த்தங்களால் நாடு முழுவதும் 44000 பயனாளிகளுக்கு மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு  தெரிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 42 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 42 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (03) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

நாமல் ராஜபக்ஸவுக்கு மேலும் ஒரு அமைச்சு பதவி

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பதவியேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (03) பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.      

சில இடங்களுக்கு வெள்ளப்பெருக்கு; 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய...

யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் இணுவில் கிராமத்தின் ஒருபகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் பலி

மட்டக்களப்பில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு இரதயபுரத்தில் இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஐஸ் போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது...

ஹப்புதலை சுகாதார பிரிவில் அதிகரிக்கும் கொரோனா

ஹப்புதலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பிடரத்மலே, தொட்டலகலா மற்றும் தம்பேதென்னா ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி...

வரையறுக்கப்பட்ட பணிகளுக்காக இன்று முதல் தபாலகங்கள் திறப்பு

நாட்டின் இன்று (03) முதல் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால்...