அரிசி, சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை

அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

அவசரகால சட்டத்தை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் செயற்படுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

ரிஷாட்டின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும்  7ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு

இணையவழியில் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர்வழங்கள்  வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக 011 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு சபையின் பொது முகமையாளர்...

கொரோனா தடுப்பூசி டிஜிட்டல் அட்டையை பெற வேண்டுமா?

 – https://covid-19.health.gov.lk/certificate/ கிளிக் செய்யவும் வெளிநாட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தியமையை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் அட்டையை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என விளையாட்டுத்துறை மைச்சர் தெரிவிக்கின்றார். இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், சுகாதார அமைச்சு...

கொரோனா மரண எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 194 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,185 ஆக...

ஜனாதிபதியின் அவசரகால விதிமுறை பிரகடனம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சுமந்திரன் (காணொளி)

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள...

பொருளாதார மையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறப்பு

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய, நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) ஆகிய இரு நாட்களில் திறக்கப்படவுள்ளதாக...