நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 18 பேர் பலி!

2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி வாகன விபத்துக்கள் காரணமாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 08 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய 10 பேர் முன்னர்...

தொடரும் பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

கம்பஹா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் இந்நாட்களில் மிகவும் அதிகமாக காணப்படுவதுடன்,இன்று (02) ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாவிலிருந்து  1500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக...

அதிபர் சேவையை அரசியல் மயப்படுத்த முயற்சி!

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சையை நடத்தாமல் பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இவ்வாறான செயற்பாட்டை முழுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்...

மீண்டும் முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  நாளை (03) முதல் தற்காலிகமாக மீண்டும்  மூடப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்டிருந்தாா். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து மசகு எண்ணெயை கொள்வனவு...

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்த நடவடிக்கை

இலங்கை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளடங்குவதாக...

கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 27 பேர் பலி

டெங்கு நோய் காரணமாகக் கடந்த ஆண்டு 27 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதற்கமைய 2019ஆம் ஆண்டு நாட்டில் 31,162 டெங்கு நோயாளர்கள்...

15000 க்கு அண்மித்துள்ள கொவிட் மரணங்கள்

கொரோனா தொற்று 239 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது.   மேலும் 16 கொவிட்...

கொவிட் தொற்றிலிருந்து 231 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 231 பேர் குணமடைந்துள்ளனர்.   சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,725 ஆக அதிகரித்துள்ளது.