உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

இன்றைய தினம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பல வரிகளை அறவிடுவதற்கான பொறுப்பை திறைசேரிக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்த அடையாள...

மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக அஜித் ரோஹண 

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு கொரோனா தொற்று

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      

கோவிட் தோற்றாளர்கள் அதிகரிப்பு; ஒமிக்ரோன் மாறுபாடே காரணம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வில் இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித்...

அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட்

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.

இன்று முதல் ஒரு கிலோ நெல்லை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே...

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும்

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமையால் சந்தையில்...