உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம், பாதுகாப்பு மற்றும் வழிநடத்தல் சேவைகளுக்காகக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற போரின் போது ஈரானுக்கு ஆதரவாகவும் நட்பாகவும் செயல்பட்ட நாடுகளுக்கு இந்தக் கட்டணத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் எனச் சீனாவிற்கான ஈரான் தூதர் அப்துல்ரேசா ரஹ்மானி பஸ்லி தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஓமனுடன் இணைந்து புதிய நடைமுறைகளை ஈரான் ஆலோசித்து வருகின்றது.
அமெரிக்கா ஈரான் இடையேயான தற்காலிக ஒப்பந்தப்படி 60 நாட்களுக்குக் கட்டணம் எதுவுமில்லாமல் கப்பல்கள் இயக்கப்பட்டுள்ளன. அந்த அவகாசம் முடிந்த நிலையில், ஈரான் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


