தான் ராஜபக்ஷ தரப்பினரின் நண்பர் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஹூணுபிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.
அங்கு ஆன்மீக வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் மக்களின் நண்பராகவே செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் எப்போதும் ராஜபக்ஷ தரப்பினருக்கு எதிராக செயற்பட்ட ஒருவராகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜபக்ஷ தரப்பினருடன் செயற்படுவதன் மூலம் தான் அவர்களின் நண்பராக முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.