முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


