பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த நீண்ட நாள் நோயினால் பீடிக்கப்பட்ட வயோதிப நபர் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இன்று (15) உயிரிழந்தார்.
குறித்த நபரின் மகள் இதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தாக பஸ்ஸர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அதேபோல், இவர்களில் உறவினரான பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.