சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சிரிய கண்காணிப்புக் குழுவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் மற்றும் மத்திய சிரிய பகுதிகளில் நேற்று செவ்வாய் இரவு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றிரவு 11.30 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பு இஸ்ரேலின் பல ஏவுகணைகளை நடுவானில் தடுத்து விட்டதாக சிரியாவின் தேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல்களில் சிரியாவைச் சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.