Date:

பசறையில் தனிமைப்படுத்தப்பட்ட பியூமி

பிரபல அழகு கலை நிபுணர் சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட 15 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பசறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திம ஜயசிங்க உள்ளிட்ட பலர், கடந்த 30ம் திகதி கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமலில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...