Date:

பசறையில் தனிமைப்படுத்தப்பட்ட பியூமி

பிரபல அழகு கலை நிபுணர் சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட 15 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பசறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திம ஜயசிங்க உள்ளிட்ட பலர், கடந்த 30ம் திகதி கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமலில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எரிபொருளினைப் பெறுவதற்கு மீண்டும் நீண்ட வரிசை (Pics)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம்...

வேகமாக பரவும் அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் மர்மமான வைரஸ்

சிறுவர்களிடையே தற்போது வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று அதிகமாக...

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த...