Date:

பசறையில் தனிமைப்படுத்தப்பட்ட பியூமி

பிரபல அழகு கலை நிபுணர் சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட 15 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பசறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திம ஜயசிங்க உள்ளிட்ட பலர், கடந்த 30ம் திகதி கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமலில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: அதிகரிக்கும் போர் காரணமாக திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான...

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது ஈரான்

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை...

கட்டாருக்கு அச்சுறுத்தல்? வான்வெளியை மூடியது கட்டார்

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து...

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின்...