Date:

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே (Kimbe) நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு (PTWC) ஆரம்பத்தில் சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டு, “சில கடற்கரைகளில் ஆபத்தான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன” என்று கூறியது.

இருப்பினும், அது பின்னர் ரத்து செய்யப்பட்டது.

பப்புவா நியூ கினியா, பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது பெரும் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் பதிவாகவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி

கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு...

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி...

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...