Date:

மீண்டும் ஆரம்பிக்கும் IPL | வீரர்கள் பங்கேற்றுவதில் சந்தேகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (17) மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச போட்டி அட்டவணை இடையூறை ஏற்படுத்தி இருப்பதோடு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய போட்டி அட்டவணையின்படி IPL தொடர் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியே நிறைவடையவுள்ளது. அது திட்டமிடப்பட்ட காலத்தை விடவும் தாமதத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் பருவம் ஆரம்பமாவது மற்றும் ஜூன் 11 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான தயார்படுத்தல்கள் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் ஒருநாள் தொடர் எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்காக அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தயார்படுத்தல்களை மே இறுதியில் ஆரம்பிக்கவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...