Date:

கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்

கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள், உத்தரவுகளை வழங்கியுள்ளது.

கொழும்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

எனவே வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...