Date:

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று

லங்கா T10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், நுவரெலியா கிங்ஸ், கெண்டி போல்ட்ஸ், கோல் மார்வல்ஸ், கொழும்பு ஜகுவார், ஹம்பாந்தோட்ட பங்க்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.

தொடரின் அனைத்து போட்டிகளும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதன்படி, இன்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஜஃப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்ட பங்க்ளா டைகர்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் முதலாவது போட்டி இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜகுவார் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று மாலை 6.15 அளவிலும் கெண்டி போல்ட்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இரவு 8.30 அளவிலும் ஆரம்பமாகவுள்ளன.

ஒரு இன்னிங்ஸுக்கு 10 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் 25 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த தொடரில் ஷகிப் அல் ஹசன், அலெக்ஸ் ஹல்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், இப்திகார் அஹமட், கரீம் ஜேனட், சௌமியா சர்க்கார், இமாத் வாஷிம், மொஹமட் ஹமீர், கைல் மில்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373