Date:

மாடியிலிருந்து விழுந்து சீன பிரஜை மரணம்

கொழும்பு கொம்பனி வீதி யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சீன பிரஜை அந்தக் கட்டிட நிர்மாணத்தில் பொறியியலாளராக பணியாற்றிய 24 வயதான இளைஞராவார்.

நேற்று (04) மாலை கட்டுமானப் பணிகளைக் கவனிக்கும் போது 8 ஆவது மாடியிலிருந்து அவர் விழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை !

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள்...

தக்காளி விலையில் சரிவு !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (17) ஒரு கிலோ தக்காளியின்...

படுக்கையில் எரிந்த நிலையில் கிடந்த கணவனின் சடலம் ! மரணத்தில் சந்தேகம் – மனைவி மற்றும் மகன் கைது

உடவலவ - கொழும்பகே பகுதியில்  உள்ள வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் நபர்...

வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படமாட்டாது ! – அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு

உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால்...