மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றைய தினம் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். காலை 11.30 மணி முதல் பகல் நிகழ்ச்சி 1.00 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் கடும் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர்.