இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு படிப்படியாக நீக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.
“இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.
அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் நிறைவு செய்யப்படும் என ஐஎம்எப் (IMF) தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி தெரிவித்துள்ளார்.