கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரும் தேசிய வைத்தியசாலையில் சங்க உறுப்பினர்கள் மீது கற்களால் தாக்கியுள்ளனர்.
இதன்போது ஏனைய வைத்தியசாலைகளின் சிறு ஊழியர்களும் வைத்தியசாலைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.