நண்பர் ஒருவருடன் இணைந்து அதிகமாக மதுபானம் அருந்திய நபர் ஒருவர், நண்பரின் ஆணுறுப்பை கூரிய கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் மீகஹகியுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்றுள்ளது.
55 வயதான குறித்த நபர் வியாலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்தவராவார்.