கடந்த மொட்டு ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு வகையிலும் தனது பங்களிப்பை வழங்கிய பாடகர் இராஜ் வீரரத்ன அதிரடியாக தனது ட்விட்டர் பக்கதில் ஒரு பதிவினையிட்டுள்ளார்.
தான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் புத்கமுவ வட்டாரத்தில் போட்டியிடுவதாக ஒரு விளம்பரம் ஒன்று சமூகவலைத்தளத்தில் உலாவருவதாகவும் இதனை யார் செய்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் பல்வேறு இனவாத கருத்துக்களுக்கு ஏற்றால் போன்று செயற்பட்டமை தற்போது உள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் சிவப்பு புள்ளியாகும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
கடந்த ஆட்சிகாலத்தில் பாடகர் இராஜ் வீரரத்ன சில முக்கிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் மக்கள் புரட்சியின் போது அரசின் பங்காளர் என்று தெரிவித்து சில கும்பல்களால் அவருடைய கிருலப்பனையிலுள்ள வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பின்னர், பாரிய இடைவௌிக்கு பிறகு தற்போது வித்தியசமான ஒரு தகவலை தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கதில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உயர் மட்ட உறுப்பினருடன் தொடர்பு கொண்டு வினவிய போது இவருக்கு கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
කවුද මේක හැදුවේ ? දිලිත් ජයවීරත් මාලිමාවට ගිය නිසා මාත් යන්න බැලුවේ ☺️ @Dilith2 #lka #SriLanka #npp #jvp 🐒🔥 pic.twitter.com/Alx4KdAUWl
— Iraj (@irajonline) January 28, 2023