மியான்மாரின் தற்போது உள்ள இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் முயற்சியில் இந்தியா செயற்படுகின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வௌியிட்டுள்ளன.
சர்வதேச ரீதியான புதிய கொள்கைளை நோக்கி உலக நாடுகள் நகர்வதை பார்க்ககூடியதாகவுள்ளது. அதில் முக்கியமாக.
அங்கு ஒவ்வொரு நாடும் தார்மீக மற்றும் நெறிமுறைக் கண்ணோட்டங்களைத் தெளிவாகப் புறக்கணித்து தங்கள் நலன்களை தீவிரமாக மேம்படுத்தத் தொடங்கியுள்ளன.
முக்கியமாக ரஷ்ய – உக்ரைன் போர் மற்றும் மியான்மாரில் இராணுவ புரட்சி பற்றிய இந்திய நிலைப்பாடு சந்தேகத்திற்குரிய வெளியுறவுக் கொள்கையை தெளிவாகக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
முக்கியமாக சீனா செல்வாக்கை குறிவைத்து இந்தியா மியான்மார் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த
இராணுவ ஆட்சியாளர்களுடன் தனது உறவை மேம்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் போராடிய இரண்டாயிரத்துக்கும் அதிகமாக பொதுமக்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் சர்வதேசரீதியில் குறித்த ஆட்சிக்கு எதிராக பல்வேறுநாடுகள் எதிர்ப்பை வௌியிட்டுவரும் நிலையில் இந்தியாவின் செயற்பாடு பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வௌியிட்டுள்ளன.
Source – https://www.macaubusiness.com/indian-foreign-minister-defends-ties-with-myanmar-junta/
Source- https://www.civilsdaily.com/story/foreign-policy-watch-india-myanmar/