கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், கம்பஹா நகரத்திற்கு அத்தியாசிய காரணத்தைத் தவிர எவரும் பிரவேசிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நகர மேயர் ஏரங்க சேனாநாயக்க இந்த அறிவிப்பை இன்று (17) வெளியிட்டிருக்கின்றார்.
முன்னதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, டெல்ட்டா தொற்றின் உயரிய அச்சுறுத்தல் இருப்பதால் கொழும்பு நோக்கி வருவோருக்கு எச்சரிக்கையை நேற்று (16) வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.