நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர்.
பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு” என்று தலைமை மாவட்ட அதிகாரி டெக் பகதூர் கே.சி நேபாளத்தைச் சேர்ந்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
பயணித்த விமான விபத்துக்குள்ளானது! – உடல்களும் மீட்பு : https://t.co/DibO6ERn4L #Nepal #YetiAirlines #Pokhara #srilanka #lka #india pic.twitter.com/9kb57SsaCG
— newstamil.lk (@NewsTamilGlobal) January 15, 2023