Date:

பசில் ராஜபக்சவுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்பட்டது : காரணம் இதோ

ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்திருந்தாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பாக பேசிய இராஜாங்க அமைச்சர், எந்தவொரு தனிநபருக்கும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து SIS தீர்மானிக்கிறது என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாமன்ற உறுப்பினர் இல்லாத போது அவருக்கும் இதற்கு முன்னரும் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது, இது SIS எடுத்த தீர்மானம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே, அத்தகைய நபருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது பாதுகாப்புப் பிரிவினரின் பொறுப்பாகும் என்றார்.

பசில் ராஜபக்சவின் குடும்ப உறவுகள் மற்றும் அவருக்கு எதிரான பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அவர் இலங்கை வந்ததைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்ததாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பால் மாவின் விலை சடுதியாக குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள்...

கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில்...

ஈரான் ஜனாதிபதியின் வாக்குறுதி

  ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள...

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரம்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC...