ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை தேசியப் பட்டியலில் மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றால், பாராளுமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள ஐ.தே.காவின் தேசிய பட்டியல் ஆசனத்துக்கே ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் ருவான் விஜேவர்தனவிற்கு சட்டம் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.